×

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு!

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு 9 ஆக உயர்ந்துள்ளது. மதுரை சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மதுரை போடி ரயில் தடத்தில் ஐ ஆர்சிடிசி சுற்றுலா ரயில் நேற்றிரவு நிறுத்தப்பட்டிருந்தது. இதில் சிலர் சமையல் கேஸ் வைத்து டீ போட முயன்றதாக தெரிகிறது. இந்த சூழலில் காலை 5.30 மணி அளவில் இந்த சுற்றுலா ரயிலின் சமையல் கோசில் இருந்த சிலிண்டர் வெடித்து தீ பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த ரயில் பெட்டியில் பயணம் செய்த 90 பேரில் 80 பேர் தப்பி ஓடியதாக தெரியவந்துள்ளது. ரயில் இருந்த பயணிகள் சிலர் சமையல் செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைத்திருந்தனர்.

இதன் மூலமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. ரயில் விபத்து நடந்த இடத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

 

The post மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு! appeared first on Dinakaran.

Tags : Madurai railway station ,Madurai ,Dinakaran ,
× RELATED மதுரை ரயில் நிலையம் 10 மடங்கு...