×

கூல் லிப் போதைப்பொருள் வழக்கில், மூன்று நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: விட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை ஹான்ஸ் போன்ற புகை பொருட்களை பயன்படுத்தியதாகவும் கூல் லிப் என்ற குட்காவை அதிகம் விற்பனை செய்ததாகவும் போலீசாரால் வழக்கு பதிவு செய்து ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதுபோன்ற வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

தமிழகத்தில் கூல் லிப் போதைப்பொருளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் , பிற மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறது. இத்தகைய போதைப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. தற்போது பள்ளி மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க போதை பொருட்கள் பயன்பாடே காரணம்.கூல் லிப் போதைப்பொருளுக்கு மாணவர்கள் அதிகம் அடிமையாகி வருவது வேதனை அளிக்கிறது. இதனால் இளம் தலைமுறை சிந்திக்கும் திறன் முற்றிலும் மறைந்து வருகிறது.

குழந்தைகளை நாம் எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம்? போதைப்பொருள் விற்றால் கைது செய்யப்படுகிறார்கள், பிறகு ஜாமினில் வெளியே வந்து விடுகிறார்கள். 15 நாட்களுக்கு கடை மூடப்படுகிறது. பின்னர் வழக்கம் போல் செயல்பட தொடங்கி விடுகிறது.போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது, மருத்துவ பரிசோதனைகளை செய்வது போன்ற எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கலாம்? என முடிவு செய்ய வேண்டும். ஆகவே கூல் லிப்-ஐ பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என்பது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், நீதிபதி பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சோனேபேட், பகுதியை சேர்ந்த தேஜ்ராம் தரம் பால் பிரைவேட் லிமிடெட், கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியை சேர்ந்த விதரத் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், கர்நாடகா மாநிலம் தும்குரு, அந்தரசனஹள்ளி இண்டஸ்ட்ரியல் ஏரியா, பகுதியை சேர்ந்த VRG புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களையும் இந்த வழக்கில் நீதிமன்றமே தாமாக முன் வந்து எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார். மேலும் இந்த புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post கூல் லிப் போதைப்பொருள் வழக்கில், மூன்று நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Kool Lip ,ICourt ,Madurai ,Gutka ,Tamil Nadu government ,Cool Lip ,Dinakaran ,
× RELATED கல்லீரல் அறுவை சிகிச்சை கட்டமைப்பு: ஐகோர்ட் கிளை கேள்வி