×

கால்வாயைத் தூர்வார அனுமதி கோரிய மனு: ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: கால்வாயைத் தூர்வார அனுமதி கோரிய மனு மீது ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. இளைஞர்கள் தாமாக முன்வந்து கால்வாய்களை தூர்வார அனுமதி கோரியும் ஏன் வழங்கவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், வழக்கு குறித்து ராமநாதபுரம் ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்து வருகிறார், ஆனால் அதிகாரிகள் திருப்பி அனுப்புகிறார்கள். அதிகாரிகளின் பொறுப்பின்மையால் முதலீடு செய்பவர்கள் திரும்பி விடுகிறார்கள் என கால்வாய்களை தூர்வார தொண்டு நிறுவனத்திற்கு அனுமதி கோரிய வழக்கில் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

The post கால்வாயைத் தூர்வார அனுமதி கோரிய மனு: ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram Collector ,IC Court Branch ,Madurai ,High Court ,Ramanathapuram ,
× RELATED வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த...