×

புர்கினா பாசோவில் 60 பேர் சுட்டுக் கொலை: தீவிரவாத கும்பல் அட்டூழியம்

புர்கினா: மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள புர்கினா பாசோவில், புர்கினாபே ஆயுதப்படை வீரர்கள் அணியும் சீருடையை அணிந்து சென்ற தீவிரவாத கும்பல், உள்ளூர் மக்களை சரமாரியாக சுட்டத்தில் சுமார் 60 பொதுமக்கள் பலியாகினார். இதுகுறித்து ஓவாஹிகோயா நகர காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘அல் கொய்தா மற்றும் இஸ்லாமியக் குழுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாலிக்கு அருகிலுள்ள எல்லைப் பகுதியான யாதெங்கா மாகாணத்திற்கு உட்பட்ட கர்மா கிராமத்தில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. கடந்த 15ம் தேதி அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய திடீர் தாக்குதலில், வடக்கு புர்கினா பாசோவில் 40 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 33 பேர் காயமடைந்தனர். இவர்களில் ராணுவம் மற்றும் தன்னார்வ படைகளை சேர்ந்தவர்களும் பலியாகினர்’ என்றன.

The post புர்கினா பாசோவில் 60 பேர் சுட்டுக் கொலை: தீவிரவாத கும்பல் அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : Burkina Faso ,Burkina ,Dinakaran ,
× RELATED பர்கினோ பாசோவில் அரசுக்கு எதிராக...