×

பாஜ செயலாளர் அஸ்வத்தாமனை கைது செய்ய இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக பாஜ செயலாளரான அஸ்வத்தாமன் கடந்த 7ம் தேதி நாகப்பட்டினத்தில் நடந்த கூட்டத்தில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பு பேச்சு பேசியதாக நாகூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அஸ்வத்தாமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை அஸ்வத்தாமனை கைது செய்ய தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

The post பாஜ செயலாளர் அஸ்வத்தாமனை கைது செய்ய இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Ashwathaman ,CHENNAI ,Nagor police station ,Tamil Nadu ,Nagapattinam ,Aswathaman ,
× RELATED கர்நாடகாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜ எம்எல்ஏ மீது பாலியல் வழக்கு