×

இருமொழிக் கொள்கை குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெள்ளத் தெளிவாக விளக்கி உள்ளார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: “தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் நிலையில் மொழித் திணிப்பு ஏன்?, ஏகாதிபத்திய மனோபாவம் கொண்ட சிலரது வசதிக்காக தமிழ்நாட்டின் மீது மொழித் திணிப்பு ஏன்?, இருமொழிக் கொள்கை குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெள்ளத் தெளிவாக விளக்கி உள்ளார்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “இருமொழிக் கொள்கையால் கல்வியில் நாட்டிலேயே மிகச்சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மும்மொழிக் கொள்கை நடைமுறையில் உள்ள உத்தரப் பிரதேசத்தில் எத்தனை குழந்தைகளுக்கு 3 மொழிகள் தெரியும்?” என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளதை மேற்கோள்காட்டி முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post இருமொழிக் கொள்கை குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெள்ளத் தெளிவாக விளக்கி உள்ளார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister ,Palanivel Thiagarajan ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...