×

ஏலச்சீட்டு மோசடி வழக்கில் ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது

ராஜஸ்தான்: ஏலச்சீட்டு மோசடி வழக்கில் ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேரை ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். ஏழச்சீட்டு மோசடி வழக்கில் குற்றாவாளிகளை கைது செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டதாக புகார் தெரிவிக்கபட்டது. ராஜஸ்தான் தேர்தல் நெருங்கும் நிலையில் அடுத்தடுத்து அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்று வந்தன. கடந்த 30-ம் தேதி 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.

The post ஏலச்சீட்டு மோசடி வழக்கில் ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Dinakaran ,
× RELATED ஷூவிற்குள் மறைந்திருந்து படமெடுத்து மிரள வைத்த பாம்பு