×

ஜாபர்கான்பேட்டை பகுதியில் சிறுவன் வெட்டிக்கொலை: அடையாறு ஆற்றில் சடலம் வீச்சு

சென்னை: ஜாபர்கான்பேட்டையில் 17 வயது சிறுவன் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டு, உடல் அடையாறு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.  ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கம் அருகே, நேற்று காலை பொதுமக்கள் நடைபயிற்சி செய்தபோது, அடையாறு ஆற்றின் கரையோரம், பலத்த வெட்டுக்காயங்களுடன் சிறுவன் சடலம் ஒன்று கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனே இதுகுறித்து குமரன் நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில், விரைந்து வந்த போலீசார், சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் உடல் கைப்பற்றப்பட்ட இடத்தில் அரிவாள் ஒன்று கிடந்தது. அதை, போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இறந்த சிறுவன் யார் என விசாரணை நடத்தினர். அதில், எம்.ஜி.ஆர்.நகர் சூளை பள்ளம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (எ) வெள்ளை சஞ்சய் (17) என்றும், இவன் மீது பல்வேறு வழக்குகள் எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

முன்விரோதம் காரணமாக யாரேனும் இவனை கொலை செய்தார்களா, என அவனது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சஞ்சய் உடன் எப்போது ஒன்றாக சுற்றி வரும் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த சந்தோஷ் மற்றம் சக்திவேல் ஆகியோர் மீது எங்களுக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து போலீசார் சந்தோஷ் மற்றும் சக்திவேலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் உடல் கைப்பற்றப்பட்ட காசி திரையரங்கம் அருகே உள்ள அடையாறு ஆற்றின் மேம்பாலத்தின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜாபர்கான்பேட்டை பகுதியில் சிறுவன் வெட்டிக்கொலை: அடையாறு ஆற்றில் சடலம் வீச்சு appeared first on Dinakaran.

Tags : Jaffarkanbet ,Itiyarah River ,Chennai ,Saramari Vetik ,Jabarkanpet ,Idaiyaru River ,Jaffarkanbet Kashi Theater ,Jaffarkanbetta ,Adhiyaru River ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...