×

தலித் மக்கள் மீது தாக்குதல் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வருக்கு பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோட்டையூரில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தாக்குதலுக்கு உள்ளானவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.அஞ்செட்டி காவல்துறை ஆய்வாளர் முன்பே இத் தாக்குதல் நடந்துள்ளது. ஆனாலும், கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தலித் மக்கள் 6 பேர் மீது 307வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இது தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, கோட்டையூர் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் 50க்கும் மேற்பட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

The post தலித் மக்கள் மீது தாக்குதல் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வருக்கு பாலகிருஷ்ணன் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Taliban ,Balakrishnan ,Chennai ,Kottaiur ,Krishnagiri district ,CM ,Dinakaran ,
× RELATED யானை வழித்தடங்கள் தொடர்பாக விரிவான...