×

ஆவின் நிர்வாகத்தில் ஊழலை கண்டித்து பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஜெயங்கொண்டம், அக். 29: ஆவின் நிர்வாகத்தில் நிகழும் ஊழலை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஆவின் நிர்வாகத்தில் நிகழும் ஊழலை தடுக்க வேண்டும். கொரோனா காலகட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கால்நடைகளுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.5 கூடுதலாக வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகையை நிவாரணமாக வழங்க வேண்டும். பால் கொள்முதல் செய்யாமல் விடுமுறை விடுவதோடு ஒரு பகுதி பாலை வாங்காமல் திருப்பி அனுப்புவதை கைவிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மணிவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : protests ,Milk Producers Association ,administration ,Avin ,
× RELATED எதிர்ப்பு அலையால் மக்களை...