×

வேளாண் இணை இயக்குனர் தகவல் வலங்கைமான் அருகே டூவீலர் மோதல் படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

வலங்கைமான், அக்.23: வலங்கைமான் அடுத்த மதகரம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஏரி வேலூர் ஊராட்சி சேலூர் பகுதியை சேர்ந்தவர் சின்னக்கருப்பன் மகன் சந்திரசேகர்(40). இவர் கடந்த 12ம் தேதி தனது மனைவி அனிதாயுடன் பைக்கில் திருக்கருகாவூர் வழியாக பாபநாசம் சென்றார். மதகரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக குறுக்கே வந்த டூவீலர் மீது பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த சந்திரசேகரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சந்திரசேகர் இறந்தார். இதில் அனிதா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : collision ,Associate Director of Agriculture Information Two ,Valangaiman Death ,
× RELATED மோடிக்கும், ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி: அஜித் பவார் பேச்சு