×

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆசிரியர் வீட்டில் 32 பவுன் நகை ₹4.80 லட்சம் துணிகர கொள்ளை

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.28: பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆசிரியர் வீட்டில் 32பவுன் நகை, ₹4.80லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ராமியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமரேசன்(54). இவர் கோபிநாதம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி(44). இவர் புதுப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்று விட்டனர்.இந்நிலையில் நேற்று மாலை குமரேசனின் தந்தை மாறன் குமரேசனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து குமரேசனுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து வீட்டிற்கு வந்த குமரேசன் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 32பவுன் நகை, ₹4.80லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து, குமேரேசன் கோபிநாதம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ேபாலீசார், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா