×

சூதாடிய 11பேர் கைது 6 டூவீலர்கள் பறிமுதல்

தர்மபுரி, பிப்.28:அதியமான்கோட்டை, லளிகம் ஏரிக்கரையில் சூதாட்டம் நடப்பதாக, அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதியமான்கோட்டை போலீசார், சம்பவ இடத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார், ராமகிருஷ்ணன், அமரவேல், முருகன், புவியரசு, மணி, செல்வம், சிதம்பரம், மாதேஸ், பிரபு உள்ளிட்ட 11பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 6 டூவீலர்கள், ₹5,300 பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா