×

டெல்லி வன்முறை சம்பவம் கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 49 பேர் கைது

பெரம்பலூர், பிப்.28: பெரம்பலூரில் டெல்லி வன்முறை கண்டித்து எஸ்டி பிஐ கட்சியின் சார்பில் தலைமை தபால் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 49பேர் கைது செய்யப்பட்டனர்.டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை தாக்கி படுகொலை செய் தவர்களை கண்டித்தும், தடுக்கத் தவறிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் எஸ்டிபிஐகட்சியின் சார்பில் பெரம்பலூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது பாரூக், மாவட்ட செயலாளர்கள் சாஜஹான், பிலால், மாவ ட்ட பொருளாளர் ஜியாவு தீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் காஜா சரீப், அஹமது இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முற்றுகைப் போராட்டத்தையொட்டி மவுலானா பள்ளி அருகே துவங்கி கோஷமிட்டவாறு சென்றனர். இதில் எஸ்டிபிஐ கட்சி யின் நகர, கிளை நிர்வா கிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். பிறகு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 49பேர்களை பெரம்பலூர் போலீசார் கைதுசெய்து மாலையில் விடுவித்தனர்.



Tags : siege protest ,Delhi ,
× RELATED அமலாக்கத்துறை வழக்கில் அரவிந்த்...