×

மார்ச் 1ல் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

ஜெயங்கொண்டம், பிப். 28: மார்ச் 1ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது என ஜெயங்கொண்டம் ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் குணசேகரன் தலைமை வகித்தார். பேரூர் கழக செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் சரண்யா வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேர்தல் மேற்பார்வையாளர் சைதை குணசேகரன், மாவட்ட செயலாளர் சிவசங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மார்ச் 1ம்தேதி திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, திமுக 15 வது பொது தேர்தல், ஊர் கிளை, ஊர் கிளை வார்டு கிளை தேர்தல் நடத்துவது, மற்றும் கட்சி ஆக்கப்பணிகள் குறித்து பேசினர். கூட்டத்தில் கழக சட்ட திருத்த குழு உறுப்பினர் சந்திரசேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் பொய்யாமொழி, மாவட்ட துணை செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் லதாகண்ணன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் இராஜேந்திரன், முரசொலி குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். முன்னதாக ஒன்றிய செயலாளர் தனசேகர் வரவேற்றார். இறுதியில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Tags : Stalin ,Birthday Celebration ,
× RELATED நீங்கள் நலமா? திட்டம்: மக்களிடம்...