×

ஹஜ் பயணம் செல்வோர் எண்ணிக்கையை அதிகரிக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம் : ஹஜ் அசோசியேஷன் வரவேற்பு

சென்னை: ஹஜ் பயணம் செல்வோர் எண்ணிக்கையை அதிகரிக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளதற்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் ஹஜ் இல்லம் கட்டுவதற்கு சட்டமன்ற கூட்ட தொடரில் 15 கோடி ஒதுக்க முதல்வர் அனுமதி அளித்திருக்கிறார். அதேபோல், உலமாக்களின் ஓய்வூதியம் 1,500லிருந்து இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2020ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோருக்கான எண்ணிக்கையை அதிகரித்து தருமாறு பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டு ஹஜ் செல்ல 6028 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. ஆனால் 3736 பேருக்கு மட்டுமே ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி கிடைத்துள்ளது என்று முதல்வர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் ஹஜ் பயணம் செல்ல முடியாத காரணத்தால் ஏராளமான காலியிடங்கள் உள்ளன. அந்த காலி இடங்களை தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்வோருக்கு ஒதுக்கித் தருமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது மிகுந்த மன நிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இதற்கு முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், ஹஜ் பயணம் செல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து செய்து வரும் மத்திய அரசுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : pilgrims ,Hajj Association ,
× RELATED இது வரை 1.35 லட்சம் பேர் விண்ணப்பம் ஹஜ்...