மேலூர், பிப்.26: மேலூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் வாய் பேச முடியாத, காது கேட்காத சுமார் 70 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் உடல் நலக்குறைவுடன் சில நாட்களாக இருக்கிறார். சைகையில் இவரிடம் பேசினாலும் சரியான பதிலை பெற முடியவில்லை. இவரை மீட்டு ஆதரவற்றோர் அல்லது முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.