புதுச்சேரி, பிப். 25: புதுவை பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளியின் 174வது ஆண்டு விழா உப்பளம் மழலையர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் அருண் பங்கேற்று கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். ஜிஎஸ்டி முதன்மை ஆணையர் ஜஹான்சீப் அக்தர், விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கேடயங்களை வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் புதுச்சேரி- கடலூர் உயர் மறைமாவட்ட முதன்மை குரு அருளானந்தம், கல்வி செயலாளர் ஜோசப்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். முடிவில் பள்ளி துணை முதல்வர் லூர்து ஜெயராஜ் நன்றி கூறினார்.