×

புளுதியூர் வாரச்சந்தையில் ₹29 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

அரூர், பிப்.20: அரூர் அடுத்த புளுதியூர் வாரச்சந்தையில், நேற்று ₹29 லட்சத்துக்கு மாடுகள் விற்பனையானது. அரூர் அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், புதன்கிழமைதோறும் வாரச்சந்தை கூடுகிறது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இங்கு ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆடு, மாடுகளை விற்பனைக்கு ஓட்டி வருகின்றனர்.இவற்றை வாங்க சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், இறைச்சி கடைக்காரர்கள் வருகின்றனர். இந்த வாரம் சந்தையில் நாட்டு மாடு, ஜெர்சி பசுக்கள்  ₹14,500 முதல் ₹43,500 வரையும், ஆடுகள் ₹3,800 முதல் ₹9,500 வரையும், கோழிகள் ₹600 வரையிலும் விற்பனையானது. சந்தையில் ₹29 லட்சத்துக்கு மாடுகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா