×

த்ரோபால் போட்டி நாளை துவக்கம்

ஈரோடு, பிப்.20: ஈரோடு மாவட்ட த்ரோபால் கழகம் சார்பில் 42வது தேசிய அளவிலான த்ரோபால் போட்டி வரும் 21ம் தேதி (நாளை) சூர்யா பொறியியல் கல்லூரியில் துவங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 8 பெண்கள் அணி, 14 ஆண்கள் அணி கலந்து கொள்கின்றன. இதற்கான துவக்க விழா 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை சர்வதேச த்ரோபால் பொதுச்செயலாளர் ராமண்ணா துவக்கி வைக்கிறார். நிறைவு விழாவில் மில்கி மிஸ்ட் நிறுவன தலைவர் சதீஷ்குமார் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்குகிறார். போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தலைவர் நடராஜன், பொதுச்செயலாளர் மணி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Tags : Throwball Tournament Starts Tomorrow ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...