×

மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

தர்மபுரி,  பிப்.19:  மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் பெறக்கோரி, தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன், தர்மபுரி மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ பணியாளர் நலச்சங்கம் சார்பில்,  நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஏஐடியூசி மாவட்ட தலைவர் பெரிய முனுசாமி  தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாநில பொதுச்செயலாளர்  மாரியப்பன், மாவட்ட பொதுச்செயலாளர் மணி, துணை செயலாளர் நடராஜன்,  ராமமூர்த்தி, ராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.அபராத தொகையை குறைக்க வேண்டும், ஆட்டோவின் எப்ஃசி காலத்தில் ₹10 ஆயிரம் வழங்க  வேண்டும், உண்மையான ஆட்டோ தொழிலாளர்களுக்கு பர்மிட் வழங்க வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : Demonstration ,withdrawal ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்