×

பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது

மேலூர், பிப். 18: மேலூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 11 பேரை மேலூர் போலீசார் கைது செய்தனர். மதுரை மேலூர் அருகே சுக்காம்பட்டி மற்றும் திருவாதவூர் பகுதியில் பணம் வைத்து சிலர் சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவ்விடத்திற்கு சென்ற போலீசார் கருப்பணன், மன்னன், ஜெயபிரகாஷ், சந்திரன், கோபிநாத், முருகன், தவமணி உட்பட 11 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ. 7 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் 11 பேரும் பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்

Tags : persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...