×

திருச்செங்கோட்டில் மின் நிறுத்தம் ரத்து

திருச்செங்கோடு, பிப்.18: திருச்செங்கோடு துணை மின் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று(18ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருச்செங்கோடு நகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இருப்பதால், அவர்களது நலனை கருத்தில் கொண்டு, துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளை ரத்து செய்து விட்டு வழக்கம் போல இன்று(18ம் தேதி) மின் வினியோகம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : CEB ,
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி