×

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு

பெரம்பலூர்,பிப்.18: பூலாம்பாடியில் ஜல்லிக்கட்டு நட த்த அனுமதி கோரி விழாக்குழுவினர் பெரம்பலூர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் திங்கள் கிழ மை தோறும் நடத்தப்படும் பொதுமக்கள் குறை தீர்க் கும் நாள் கூட்டம் நேற்று (17ம் தேதி) கலெக்டர் சாந்தா தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் பெர ம்பலூர் மாவட்டம் வேப்பந் தட்டை தாலுகா, பூலாம் பாடி கிராமத்தைச் சேர்ந்த சித்திரை திருவிழா விழா குழு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் அளி த்துள்ள கோரிக்கை மனு வில் தெரிவித்திருப்பதாவ து: பூலாம்பாடி கிராமத்தில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு திருவிழா நடத்த உள்ளோம். எனவே பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஜல்லிக்கட்டு நட த்த உள்ள இடத்தை சம்பந் தப்பட்ட துறையினர் மூலம் ஆய்வு செய்து ஜல்லிக்கட் டு நடத்த அனுமதி வழங்கு மாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ள னர்.

Tags : Jallikattu ,Perambalur district ,Poolambadi ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி