×

மரம் முறிந்து விழுந்ததில் காயம் முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு

ஜெயங்கொண்டம், ஜன. 29: ஜெயங்கொண்டம் அருகே மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குருவாலப்பர் கோயில் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (70). இவர் அதே ஊரில் வசிக்கும் மேலும் சிலருடன் சேர்ந்து முருகேசன் என்பவருடைய வீட்டில் கொட்டகை போட்டு கொண்டிருந்தனர்.

கடந்த 25ம் தேதியன்று கொட்டகை போட்டு கொண்டிருக்கும்போது திடீரென கொட்டகையில் மரம் முறிந்து விழுந்ததில் மகாலிங்கம் கீழே விழுந்தார்.
இதில் தலையில் படுகாயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மகாலிங்கம் இறந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : tree fall ,
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...