×

சரவண பொய்கையில் கலெக்டர் ஆய்வு

திருப்பரங்குன்றம், ஜன.23: திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் கலெக்டர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான சரவண பொய்கையில் பாபா ஆராய்ச்சி கழகத்தின் நீர் மேலாண்மை விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையில் தண்ணீரை தூய்மைப்படுத்தும் முயற்சியாக கடந்த மே மாதம் தெளிப்பான் பொருத்தப்பட்டது. இதை பொருத்திய சில நாட்களிலேயே பயன்பாடு இல்லாமல் கிடந்தது. இந்நிலையில் மீண்டும் தற்பொழுது தெளிப்பான் மூலம் சரவணப்பொய்கையை சுத்தப்படுத்தும் பணி துவங்கியது. இந்த பணியை கலெக்டர் வினய் நேற்று பார்வையிட்டார். சுப்பிரமணியசுவாமி கோயில் துணை ஆணையர்(கூடுதல் பொறுப்பு) ராமசாமி, பொறியாளர் சிவ.முருகானந்தம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மோகன்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...