×

குடியரசு தின விழாவைெயாட்டி தேசிய கொடிகள் விற்பனை மும்முரம்

தர்மபுரி, ஜன.23: தர்மபுரியில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடிகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26ம் தேதி  கொண்டாடப்பட உள்ளது. இதில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், மத்திய அரசு அலுவலகங்களில் தேசிய கொடியேற்றி கொண்டாடப்படுவது வழக்கம். இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தர்மபுரி நகரில் தேசிய கொடி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. தர்மபுரி நகரில் உள்ள காதி விற்பனை மையங்களில் கதர் தேசிய கொடி விற்பனைக்கு வைக்கப்பட்டு, ₹50 முதல் ₹300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல், பஸ் நிலையம் அருகே ஸ்டேஷனரி கடைகளில் சட்டையில் குத்தப்படும் வகை கொடிகளும், கதர் தொப்பிகள் என பல்வேறு ரகங்களில் விற்பனைக்கு உள்ளன. வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் கொடிகளையும், பேட்ச்களையும் வாங்கி செல்கின்றனர். இது குறித்து கடைகாரர்கள் கூறுகையில், ‘பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் இந்திய குடியரசு தின விழாவிற்காக தேசிய கொடிகளை வாங்கி செல்கின்றனர். இதனால் தேசிய கொடிகள் விற்பனை அதிகரித்துள்ளது,’ என்றனர்.

Tags : National Flags for Republic Day Celebrations ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா