×

வேப்பிலைப்பட்டியில் சிதிலமடைந்த நிழற்கூடத்தால் பயணிகள் அவதி

கடத்தூர், ஜன.23: வேப்பிலைப்பட்டியில் சிதிலமடைந்த நிழற்கூடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்தூர் அருகே வேப்பிலைப்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக வேப்பிலைப்பட்டியில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பஸ் நிறுத்தம் கட்டப்பட்டது.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட நிழற்கூடம் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது. மேலும், எந்த நேரத்திலும் இந்த நிழற்கூடம் முற்றிலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, சிதிலடைந்து காணப்படும் இந்த நிழற்கூடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Travelers ,Vepilipatnam ,
× RELATED காரைக்குடி-திண்டுக்கல் இடையே புதிய...