×

மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

அரூர், ஜன.21: இந்திய  சதுரங்க கழகத்தின் சார்பில், தர்மபுரி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள்  அரூரில் நடைபெற்றது. போட்டியில் மாவட்டம் முழுவதிலுமிருந்து தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் சுமார்  300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டிகளை மருத்துவர் ஆனந்த் துவக்கி வைத்தார். மண்டப  உரிமையாளர்  ராஜகோபால் தலைமை தாங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  இளவரசன், வீனஸ் சரவணன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். கடந்த நான்கு  வருடங்களாக மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு  வருகிறது. வெற்றி பெற்றவர்கள் மட்டுமின்றி பங்கேற்ற அனைவருக்கும்  சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

Tags : chess competition ,
× RELATED மாநில சதுரங்க போட்டிக்கு கோவில்பட்டி ஜோசப் பள்ளி மாணவர் தேர்வு