×

போலீசை அரிவாளால் வெட்டியவர் குண்டர் சட்டத்தில் கைது

ஜெயங்கொண்டம், ஜன. 21: ஜெயங்கொண்டம் அருகே போலீசை அரிவாளால் வெட்டியவர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி உடையார்குடியை சேர்ந்தவர் மணிவண்ணன் (40). இவர் தனது மனைவிக்கும் தனக்கும் உள்ள தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் கடந்த டிசம்பர் 26ம் தேதி புகார் அளிக்க வந்தார். அப்போது பணியிலிருந்த நிக்கோலஸ் என்ற ஏட்டு, தற்போதைக்கு அதிகாரிகள் இல்லை, தேர்தல் நேரமாக உள்ளது எனக்கூறி சென்றுவர கூறினார்.இதனால் ஆத்திரமடைந்து எப்போது வந்தாலும் ஆளில்லை, அதிகாரி இல்லை என கூறுகிறீர்கள் என கூறி நிக்கோலஸ் என்ற ஏட்டுவை திட்டி தான் வைத்திருந்த அரிவாளால் வெட்டியுள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிந்து மணிவண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தார்.இதே மணிவண்ணன் மீது விருத்தாசலம் கடைவீதியில் கடந்த 2018 டிசம்பர் மாதத்தில் கணவன், மனைவியை திட்டி தாக்கி தகராறு செய்த வழக்கு உள்ளது. மேலும் ராதாபுரம் கிராமத்தில் தான் திருமணம் செய்து விவாகரத்து செய்த சங்கீதா (35) என்ற மனைவியை தன்னோடு சேர்ந்து வாழகோரி மனைவியின் குடும்பத்தினரை தீட்டி தாக்கிய வழக்கு மீன்சுருட்டி நிலையத்தில் உள்ளது.இந்த வழக்குகள் தொடர்பாக திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, டிஎஸ்பி மோகன்தாஸ் எஸ்பி சீனிவாசன் ஆகியோர் பரிந்துரையின்பேரில் மணிவண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார்.

Tags : thug ,
× RELATED சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கைதானவர் மீது குண்டர் சட்டம்