×

கபடி போட்டி பரிசளிப்பு

தூத்துக்குடி,ஜன.21:   இந்திய மாணவர் சங்கத்தின் 50 வது அமைப்பு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு கலை இலக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில்  கபடி போட்டி நடந்தது. மாவட்ட அளவில் பல அணிகள் கலந்து கொண்டன.  இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும்  விழா  நடந்தது. மாவட்ட தலைவர் நாத் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜாய்சன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் கார்த்திக் வரவேற்றார்  டவுன் டிஎஸ்பி  பிரகாஷ் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுள் வழங்கினார்.   மாவட்ட துணை செயலாளர் மாரிச்செல்வம் நன்றி கூறினார்.

Tags :
× RELATED மூதாட்டி தீக்குளித்து சாவு