×

பார் ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

தூத்துக்குடி, மே 9: தூத்துக்குடியில் பார் ஊழியரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி லூர்தம்மாள்புரம், முஸ்லிம் தெருவைச் சேர்ந்த உசேன்பாரூக் மகன் அல்பட்ரகுமான்(24). இவர், தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் உள்ள பாரில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 5ம் தேதி இரவு பாருக்கு வந்த 2 பேர் மது குடித்துவிட்டு பணம் கொடுக்க மறுத்துள்ளனர். பணத்தை கேட்ட போது அவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் 2 பேரும் சேர்ந்து அல்பட்ரகுமானை தாக்கினர். இதில் காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அல்பட்ரகுமான் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் எஸ்ஐ வாசுதேவன் வழக்கு பதிந்து, தூத்துக்குடி தபால்தந்தி காலனியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் அருண்பிரசாத்(24), சக்திநகரை சேர்ந்த ஜெயபாண்டி மகன் ராஜாராம்(29) ஆகிய 2 பேரையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் போலீசில் தலா ஒரு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பார் ஊழியரை தாக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Alprakuman ,Hussenbaruk ,street ,Lourthammalpuram, Thoothukudi ,Tuthukudi Jairaj Road ,Dinakaran ,
× RELATED மிக கனமழைக்கான எச்சரிக்கை:...