×

காட்டு யானைகள் வீட்டை உடைத்து அட்டகாசம்

பந்தலூர்,ஜன .21: பந்தலூர் அருகே அய்யன்கொல்லி தட்டாம்பாறை பகுதியில் காட்டு யானைகள் வீட்டை உடைத்து சேதம் செய்தது.  அய்யன்கொல்லி சுற்றுவட்டாரம் பகுதிகளான தட்டாம்பாறை, கோட்டப்பாடி, மழவன்சேரம்பாடி, கருத்தாடு உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் ஊருக்குள் உள்ளவிவசாய தோட்டங்களில் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட மரங்களை உடைத்து நாசம் செய்து வருகிறது. சில நேரங்களில்  அய்யன்கொல்லியிலிருந்து  கொளப்பள்ளி செல்லும் சாலையை வழிமறித்து வருகிறது. இதனால் வாகனஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர் இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு தட்டாம்பாறை பகுதிக்குள் ஐந்து காட்டுயானைகள் புகுந்து அப்பதியில் உள்ள  குடியிருப்புகளை விடிய விடிய முற்றுகையிட்டது. இதில், ஒரு ஒற்றையானை கலைசெல்வி என்பவரின் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. கலைசெல்வி குடும்பத்தினர் தப்பி ஓடி அருகில் உள்ள குடியிருப்பில் தஞ்சமடைந்தனர்.  தகவலறிந்த பிதிர்காடு ரேஞ்சர் மனோகரன் மற்றும் வனத்துறையினர் சம்பவம் இடத்திற்கு சென்று காட்டு யானைகளை விரட்டினர்  சம்பவ இடத்தை கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்