×

தலையில் கல்லை போட்டு வாலிபர் கொடூரக்கொலை

ராசிபுரம், ஜன. 19: நாமக்கம் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தொட்டியவலசு ஊராட்சி அல்லேரி முனியப்பன் கோயில் அருகில் குருவி தூக்கல் பாறை என்ற இடத்தில் நேற்று மாலை வாலிபரின் சடலம் கிடப்பதாக,  ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசார் சென்றனர். அங்கு தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட வாலிபருக்கு 18 முதல் 25 வயது வரை இருக்கக்கூடும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என  பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி