×

அலங்கை வீரரின் வெற்றி ரகசியம்

அலங்காநல்லூர், ஜன.19:  அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் கடைசி ஒரு மணி நேரத்தில் ரஞ்சித்குமார்(23), 16 காளைகளை அடுத்தடுத்து அடக்கி, முதல் பரிசான கார் பெற்றார். ரஞ்சித்குமார் கூறும்போது, ‘‘எனது தந்தையும் ஜல்லிக்கட்டு வீரர்தான். பல பரிசுகள் வென்றுள்ளார். என் ரத்தத்தில் கலந்தது இந்த காளை அடக்கும் வீரம். கடவுள் தந்த வரம். 14வயதிலேயே காளையை அடக்க களம்கண்டேன். எல்லா வருடமும் எனக்கு பரிசு கிடைத்துவிடும். 10வருட முயற்சியில் இப்போது முதல் பரிசு கார் வென்றுள்ளேன். அவிழ்த்து விடும் காளையின் உருவ அமைப்பைக் கொண்டே, அதனை அடக்கி விடும் லாவகம் தெரியும். அந்த உத்திதான் வெற்றி தந்திருக்கிறது’’ என்றார்.

Tags : decorator ,
× RELATED சென்னை கோட்டூர்புரத்தில் தொழிலதிபர்...