×

பெரம்பலூரில் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக கூட்டணி கட்சியினர் ஆலோசனை

பெரம்பலூர்,டிச.12:பெரம்பலூரில் உள்ளாட்சி தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்த அதிமுக கூட்டணி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்ற தொகுதி எம்எல்வுமான ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பெரம்பலூர் எம் எல்ஏ தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். முன் னாள் துணை சபாநாயகர் அருணாச்சலம் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி கட்சிகளுடன் பங்கீடு செய்து கொள்வது குறித்து கலந்தாலோசனை செய்யப் பட்டது. பின்னர் அதிமுக கூட்டணி கட்சி சார் பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு அனைத்து கட் சியினரும் முழுமையாக பாடுபட்டு வெற்றிபெற வைப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

இதில் பாமக மாநில நிர் வாகி செந்தில்குமார், மாவட்ட செயலாளர் சாமி துரை, தேமுதிக மாவட்டச் செயலாளர் துரைகாமராஜ், பாஜக மாவட்ட தலைவர் சாமி இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் கிருஷ்ண ஜனா ர்த்தனன், சமத்துவ மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னசாமி உட்படபலர் கலந்து கொண்டனர்.

Tags : allies ,AIADMK ,Perambalur ,
× RELATED பெரம்பலூரில் அம்பேத்கர் சிலைக்கு...