×

தொகுப்பு வீடுகளை சீரமைக்க கலெக்டரிடம் விசிக மனு

போச்சம்பள்ளி, டிச.4: காவேரிப்பட்டிணம் ஒன்றிய விசிக செயலாளர் திருமுருகன் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது: ஓசூர், தேன்கனிகோட்டை, சூளகிரி, அஞ்செட்டி, வேப்பனஹள்ளி, கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடர், இருளர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினருக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அரசு சார்பில் இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டது. தற்போது இந்த வீடுகளின் சுவர்கள் இடிந்து குடியிருக்க முடியாத நிலையில் உள்ளது. தற்போது மழை காலம் என்பதால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து வீடு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்த வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்கி அதை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Collector ,collection houses ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...