×

மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி

அரியலூர், நவ. 22: திருமானூர் அருகே மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பெண் இறந்தார். அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கண்டராதித்தம் மேட்டு தெருவை சேர்ந்த தொழிலாளி பூபதி. இவருக்கு இந்துமதி, நந்தினி, காயத்திரி என மூன்று மகள்கள் உள்ளனர். இவரது 2வது மகள் நந்தினி (23) இவர் எம்எஸ்சி முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். மர்மகாய்ச்சலால் பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு:...