×

பெரம்பலூர் மாவட்டத்தில் 4 கிராமங்களில் இன்று சிறப்பு திட்ட முகாம்

பெரம்பலூர், நவ.22: பெரம்பலூர் மாவட்டத்தில் 4 கிராம ங்களில் இன்று (22ம்தேதி) சிறப்புத் திட்ட முகாம்கள் நடக்கிறது என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (22ம்தேதி) வெள்ளிக்கிழமை சிறப்புத் திட்டமுகாம் நடைபெறுகிறது. அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவைகளை வழங்குவதற்காக தமிழக அரசின் சார்பில் சிறப்புத் திட்ட முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி வருவாய் வட்டாட்சியர் தலைமையில், வரு வாய்த் துறை அலுவலர்கள் பொது மக்களை தேடிச்செ ன்று அவர்களின் குறைக ளைத் தீர்க்கும் வகையில், திட்ட முகாம்கள் நடத்தப் படுகின்றது.

இந்த முகாம்களில் பொது மக்கள் அளிக்கும் பட்டாமாறுதல்கள்(உட்பிரிவு இல் லாத இனங்கள்), சிட்டா நக ல்கள், ஆதார் அட்டைகள் பெற பதிவுகள் செய்தல், குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத் தங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள், வாரிசுரிமைச் சான்றிதழ்கள், சிறு மற்றும் குறுவிவசா யிகளுக்கான சான்றிதழ் கள், முதல் பட்டதாரி அல் லது குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ்கள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை கோரும் மனுக்கள், உழவர் பாதுகா ப்புத் திட்டத்தின் உதவிகள் பெற சமர்பிக்கப்படும் மனு க்கள், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தி ன் கீழ் புதிய உறுப்பினர்க ள் சேர்த்தல், துயர்துடைப்பு மற்றும் விபத்து நிவாரண ம் கோரும் மனுக்கள் மீதா ன அறிக்கை, மேலும் ஒரே நாளில் தீர்வு காணக் கூடிய இதரமனுக்கள்மீது ஆணை கள் பிறப்பித்தல் ஆகிய வை அன்றைய தினமே உடனே பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் வழ ங்க ஏற்பாடுகள் செய்யப்ப ட்டுள்ளன.

முகாமில் பெற ப்படும் அனைத்து மனுக்க ளும் கணினியில் பதிவு செய்யப்பட்டு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படு கின்றன. உடனடியாக முடிவு செய்ய இயலாத விண்ணப் பங்க ளுக்கு 30 நாட்களுக்குள் பதில் சம்மந்தப்பட்ட மனு தாரருக்கு தெரிவிக்கப்ப டும். இதன்படி இன்று(22ம்தேதி) வெள்ளிக்கிழமை பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் தாலுகாவில் புதுநடுவலூர் கிராமத்திலும், குன்னம் தாலுகாவில் கிழுமத்தூர் கிராமத்திலும், வேப்பந்தட்டை தாலுகாவில் வெங்கலம்(மேற்கு) கிராமத்திலும், ஆலத்தூர் தாலுகாவில் கண்ணப் பாடி கிராமத்திலும் என 4 கிராமங்களில் சிறப்புத்திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன.பொது மக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்து வதற்கான இந்த முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : project camp ,villages ,district ,Perambalur ,
× RELATED தேனி மாவட்டம் அகமலை ஊராட்சிக்கு...