×

அதிமுக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, நவ.20: தமிழக உரிமையை பாதிக்கும் தென்பெண்ணையாற்று திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் தோல்வி கண்டுள்ள, அதிமுக அரசை கண்டித்து தர்மபுரி மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை(21ம் தேதி) நடக்கிறது.
இதுகுறித்து குறித்து தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள அணை உள்ளிட்ட ஐந்து திட்டப்பணிகளுக்கு தடை விதிப்பதற்கு, எந்த காரணமும் சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரின் அறிக்கைக்கு கூட பொதுப்பணித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லாமல், சம்பந்தமில்லாத துறையின் அமைச்சர் ஜெயக்குமாரை விட்டு அறிக்கை விட வைத்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. சட்ட தோல்விக்கும், வழக்கை அலட்சியமாக நடத்தியதற்கும் அதிமுக அரசு 5 மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் ஜீவாதார பிரச்னைகளில் விபரீத விளையாட்டை நடத்துவதையே தன் வாடிக்கையாக கொண்டிருக்கிறது. தமிழக உரிமையை பாதிக்கும் தென் பெண்ணையாற்று திட்டங்களை தடுத்து நிறுத்துவதில், தோல்வி கண்டுள்ள அதிமுக அரசை கண்டித்து, தர்மபுரி மாவட்ட திமுக சார்பில் நாளை(21ம் தேதி) காலை 10 மணிக்கு பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. எனவே, இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் திரளாக கலந்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,protests ,government ,AIADMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி