×

பத்தாம் வகுப்பு படித்த சமையலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்

ஜெயங்கொண்டம், நவ.19: பத்தாம் வகுப்பு படித்த சமையலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என சத்துணவு பணியாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஆண்டி மடத்தில் தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்க அமைப்பு கூட்டம் நடைபெற்றது . மாநில தலைவர் லூயிஸ் பிரான்சிஸ் தலைமை வகித்தார். இந்திராகாந்தி முன்னிலை வகித்தார் மாநில அமைப்பு செயலாளர் சீனிவாசன் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் அரசு பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மாவட்ட தலைவராக இந்திராகாந்தி செயலாளராக எழிலரசி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் விமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்கூட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்த சமையலர்களுக்கு அமைப்பாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளன்று சத்துணவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், உணவூட்டு செலவினம் நபர் ஒன்றுக்கு 5 சதம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஒவ்வொரு சத்துணவு மையத்தின் அருகில் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ9ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர் முன்னதாக எழிலரசி வரவேற்றார் இறுதியில் ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் பிரபாவதி நன்றி கூறினார்.

Tags : chefs ,
× RELATED தொழிலாளர் விதிமுறைகளில் மாற்றம்...