பரமத்திவேலூர், நவ.19: பரமத்திவேலூரை அடுத்துள்ள கோதூர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போலீசார், கோதூர் மயானம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ரங்கசாமி (38), ரவி (45), மனோகரன்(63), உதயச்சந்திரன் (55), தேவராஜ் (51), ரங்கசாமி (40), முத்துசாமி (60), தங்கப்பன் (56) ஆகிய 8 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ₹3,590 பறிமுதல் செய்தனர்.