பல்லடம்,நவ.19:பல்லடத்தில் வேர்கள் இளைஞர் சிந்தனை பேரவை, கோவை எம்.வி.கண் மருத்துவமனை ஆகியவை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு பேரவை ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பாலமுருகன் தலைமை வகித்தார். பல்லடம் வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் விமல் பழனிசாமி முன்னிலை வகித்தார். முகாமை முன்னாள் நகராட்சி தலைவர் ராமமூர்த்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இம்முகாமில் முன்னாள் நகராட்சி தலைவர் சேகர், ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,வடுகபாளையம் சண்முகசுந்தரம், ராஜசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர். கோவை,திருப்பூர் எம்.வி.கண் மருத்துவமனை டாக்டர் தங்கவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் 92 பேருக்கு கண்பரிசோதனை நடத்தினர். அதில் 13பேரை இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.