×

ஜீப் கவிழ்ந்து 12 பேர் காயம்

கூடலூர் நவ. 19: கூடலூரை அடுத்துள்ள தர்மகிரி பகுதியில் இருந்து நேற்று காலை பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஜீப் ஒன்று பிரேக் பிடிக்காமல் சாலையில் மோதி கவிழ்ந்ததால் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள் காயம் அடைந்தனர். தர்மகிரி பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ்(32) என்பவர் ஓட்டிவந்த ஜீப்பில் கூடலூர் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பயணிகள் சிலர் ஏறி கூடலூருக்கு வந்துள்ளனர். தானி மட்டம் என்ற இடத்தில் மேடான பகுதியில் ஜீப் வந்தபோது பிரேக் பிடிக்காமல் பின்னால் சென்று சாலையோரத்திட்டில் மோதி கவிழ்ந்தது.

இதில் காயமடைந்த பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர். தனியார் பள்ளி மாணவிகள் அஸ்னா, ஜோமோல், அக்ஷயா, ரோஸ்னா மரியம்,  மாணவர்கள் ஜோயிஸ், ராகுல், ரோசன், பயணிகள் லிசி(48), விஜயகுமாரி(48), லிசி (59) உள்ளிட்ட 12 பேர் கூடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் ஜீப்பை ஓட்டி வந்த ஜார்ஜ் என்பவரும் காயமடைந்து கூடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக கூடலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Jeep ,
× RELATED ஜீப்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதல்;...