×

மாவட்டத்தில் 10 தாலுகாவில் நாளை வருவாய் திட்ட முகாம்

ஈரோடு, நவ. 14: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவில் நாளை (15ம் தேதி) அம்மா திட்டம் மற்றும் சிறப்பு குறைதீர் கூட்ட முகாம்கள் நடைபெற உள்ளது. அதன்படி, ஈரோடு தாலுகாவில் நல்லகவுண்டன்பாளையம் விஏஓ அலுவலகத்திலும், பெருந்துறை தாலுகாவில் சென்னிமலை விஏஓ அலுவலகத்திலும், மொடக்குறிச்சி தாலுகாவில் எழுமாத்தூர் விஏஓ அலுவலகத்திலும் நடைபெற உள்ளது. கொடுமுடி தாலுகாவில் வள்ளிபுரம் விஏஓ அலுவலகத்திலும், பவானி தாலுகாவில் ஆப்பக்கூடல் பேரூராட்சி மன்ற அலுவலகத்திலும், சத்தி தாலுகாவில் செண்பகபுதூர் கரியகாளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சேவை மையத்திலும் முகாம் நடக்கிறது.

கோபி தாலுகாவில் கொண்டையம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்திலும், அந்தியூர் தாலுகாவில் பிரம்மதேசம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்திலும், தாளவாடி தாலுகாவில் மாதஹள்ளி ரேஷன் கடையிலும், நம்பியூர் தாலுகாவில் பொலவபாளையம் ஊராட்சி மன்ற ஊட்டச்சத்து மையத்திலும் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Revenue Project Camp ,District 10 Taluk ,
× RELATED மாவட்டத்தில் 10 தாலுகாவில் நாளை சிறப்பு குறைதீர் கூட்டம்