×

எஸ்கேவி வித்யாஸ்ரம் பள்ளியில் தேசிய கல்வி நாள் அனுசரிப்பு

திருச்செங்கோடு, நவ 13:திருச்செங்கோடு அருகேயுள்ள கந்தம்பாளையம் எஸ்கேவி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் தேசிய கல்வி நாள் அனுசரிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அப்துல்கலாம் ஆசாத், அனைவருக்கும் ஆரம்ப கல்வி கிடைக்கவும், நவீன கல்வி முறையை புகுத்தவும், இந்திய தொழில்நுட்ப கழகங்கள் அமையவும், பல்கலைக்கழக மானியக்குழு அமையவும் பாடுபட்டவர். இவரது பிறந்த நாள், தேசிய கல்வி நாளாக கொண்டாடப்படுகிறது. கந்தம்பாளையம் எஸ்கேவி பள்ளியில் அவரது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களுக்கு அப்துல் கலாம் ஆசாத் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைவர் கோல்டன்ஹார்ஸ் ரவி தலைமை வகித்தார். பொருளாளர் டாக்டர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.

Tags : SKV Vidyasram School ,
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி