பொன்னமராவதி, அக்.16: திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் பொன்னமராவதி அமல அன்னை மேல்நிலைப் பள்ளியின் 11ம் வகுப்பு மாணவி சுதந்திரா மாவட்ட அளவில் முதலிடத்தைப் பிடித்தார்.
9ம் வகுப்பு மாணவன் சுகநிலவன் பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் மூன்றாவது இடமும் பிடித்தனர். கிருத்திகா, தேவிஅபிராமி, பார்கவி ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர். மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் மரியபுஷ்பம் தமிழாசிரியர்களான கலைச்செல்வி, சத்யா ஆகியோர் பாராட்டினர்.