×

திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பேச்சு கட்டுரை, கவிதை போட்டிகள்

காஞ்சிபுரம், அக்.1: அண்ணா பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் ஜி.சுகுமார் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் வக்கீல் எழிலரசன், புகழேந்தி, ஆர்.டி.அரசு, மாவட்ட துணை செயலாளர்கள் வெளிக்காடு ஏழுமலை, தசரதன், வசந்தமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் வரவேற்றார்.மாவட்ட செயலாளர், க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்துவது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அதிக வாக்குககள் வித்தியாசத்தில் வெற்றிபெற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல் பணி  உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

மாநில நெசவாளர் அணி அன்பழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், இரா.நாகன்,  ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், ஞானசேகர், சரவணன், கே.எஸ்,ராமச்சந்திரன், தர், சத்யசாய், மாவட்ட இளைஞரணி அப்துல் மாலிக், துணை அமைப்பாளர்கள் யுவராஜ், பெ.மணி, மாணவரணி அபுசாலி, ஏ.வி.சுரேஷ்குமார், விவசாயிகள் அணி சோழனூர் ஏழுமலை, இலக்கிய அணி நாத்திகம் நாகராசன், நிர்வாகிகள், தசரதன், எம்.எஸ்.சுகுமார், சந்துரு, ஜெகநாதன், கருணாநிதி, வெங்கடேசன், கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : competitions ,DMK Youth Foundation ,
× RELATED வித்யாசாகர் குளோபல் பள்ளியில் 16ம் ஆண்டு நீச்சல் போட்டிகள்