×

கள்ளச்சாராய வியாபாரி கைது

சேலம், அக்.15: சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் மலை கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து நடப்பதாக மாவட்ட எஸ்பி தீபாகனிக்கருக்கு புகார்கள் வந்தது. இதன்பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், எஸ்ஐ லாசர்கென்னடி தலைமையிலான போலீசார் குருதாள்பட்டி ஓடை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு, மறைவிடத்தில் இருந்து கள்ளச்சாராயம் விற்பனையில் முதியவர் ஈடுபட்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் நடந்த விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் ஆரம்பத்தாண்டி புதுவலவு பகுதியை சேர்ந்த லட்சுமணன் (65) எனத்தெரியவந்தது. அவரிடம் இருந்து 10 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து, கைது செய்தனர். தொடர்ந்து, அந்த பகுதியில் போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி