பாலக்கோடு, செப். 19: காரிமங்கலம் மேற்கு ஒன்றியத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.காரிமங்கலம் மேற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில், இளைஞரணிக்கு புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் ஜிட்டாண்ட அள்ளி மற்றும் அனுமந்தபுரம் அகிய இடங்களில் நடைபெற்றது. முகாமிற்கு மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஹரி பிரசாத் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ கலந்துகொண்டு பேசுகையில், தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்கவும், தமிழக அரசுத்துறைகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முழு ஒதுக்கீடு செய்யவும், மத்திய அரசின் இந்தி திணிப்பை தடுக்கவும் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்படி, இளைஞரணிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சுடப்பட்டி சுப்ரமணி, காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன், துணை அமைப்பாளர் மகேஷ்குமார், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் மணி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவி, மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், தக்காளி மண்டி முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மாரியப்பன், நகர செயலாளர் வெங்கடேசன், இலக்கிய அணி ராஜபார்ட், யுவராஜ் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் சிவாஜி, புருஷோத்தமன் நடராஜ், ஜனார்த்தனன், ஒன்றிய பிரதிநிதிகள் முனிராஜ், விஜய், ராஜப்பன், சதாசிவம், ராஜா, இளைஞரணி (வடக்கு) ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தநிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், தங்களை திமுக இளைஞர் அணி உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர்.